பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 13 ஜனவரி, 2023

குழந்தைகளைத் தூங்க விடுங்கள்!


நாம் தூங்குவதற்கு நம்முடைய மூளையில் ‘மெலடோனின்’ என்ற சுரப்பி சுரக்கிறது. நாம் முப்பது வயதைக் கடக்கும் போது, இச்சுரபி சுரப்பது நாம் குழந்தைகளாக இருக்கும் போது சுரப்பதைவிட ஐம்பது சதவீதம் குறைகிறது.

இதனாலேயே வயதானவர்களுக்கு தூக்கம் அதிகம் கெடுகிறது.

இதற்கு இன்னொரு பெயரும் உண்டு.

‘டிராகுலா சுரப்பி ‘

இந்த டிராகுலா சுரக்க வேண்டுமானால் இருள் அவசியம்.

நமது தூக்கமே மெலடோனின் மூலம்  தான் ஆற்றல் பெறுகிறது. நம்முடைய உடலில் ஏற்படும் பல தீமையான விசயங்களை இது கட்டுப்படுத்துகிறது. இச்சுரபி சுரக்காவிட்டால் உடலில் பல கேடுகள் வந்து சேரும். 

சுரக்காவிட்டால் என்ன ?

உணவில் எடுத்துக் கொள்ளலாமே!

எடுத்துக் கொள்ளலாம்.

1 – 2 மில்லி கிராம்,  மெலடோனின் கிடைப்பதற்கு நீங்கள் 1,152,000 கப் பால் அருந்த வேண்டியிருக்கும் அல்லது 4,500 செர்ரிப் பழங்களை உண்ண வேண்டியிருக்கும்.

இவ்வளவு சிரமப்பட்டு கிடைக்கும் இச்சுரபி, இரவில் விளக்கை அணைத்து விட்டால் இலவசமாகவே கிடைத்து விடும்.

இலவசமாகவே கிடைக்கும் ஒன்றை ஏன் சிரமப்பட்டு தேட வேண்டும்!

இப்போது குழந்தைகள் சீக்கிரம் தூங்காவிட்டால், முதுமையில் அவர்களுக்கு இரவு தூக்கம் எனபது பகல் கனவாகவே ஆகிவிடும். அதனால் குழந்தைகளை சீக்கிரம் தூங்க வைப்போம். 

ref: https://www.indiatoday.in/health/story/have-trouble-sleeping-this-could-be-the-reason-2316371-2023-01-02

படம் : wikicommons


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக